Advertisment

அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Attention those who are waiting for government jobs; Major announcement release

தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இந்த அறிவிப்பின் மூலம் உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

examination municipality Corporation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe