Skip to main content

2 லட்சம் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.  இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் வெளியிட்டார். இதையடுத்து,  நான்கு பெரிய வங்கிகளுடன் ஆறு சிறிய வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.  

a

 

இந்த நவடிக்கையினால், பொதுத்துறை வங்கிகள் சர்வதேச தரத்திற்கு  வலிமை பெறுவதுடன், நிர்வாக செலவு கணிசமாக குறைந்து, பொருளாதாரம் மேம்படும் என்று கருதுகிறது மத்திய அரசு.  ஆனால்,  இந்த இணைப்பு நடவடிக்கைக்கு  அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.   நிலைமை இப்படியே  சென்றால், நாளடைவில் இது தனியார் மயம் ஆவதற்கும் வழிவகுத்துவிடும் என்று அஞ்சுவதால் இந்த எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.  மத்திய அரசு இணைப்பு திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

no

 

அதன்படி, முதற்கட்டமாக வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.  இவ்விரு தினங்களிலும் வங்கிகள் திறந்திருந்தாலும் எந்த ஊழியர்களும் பணியில் ஈடுபடமாட்டார்கள் என்று வங்கிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தினால் இந்தியா முழுவதும் 2 லட்சத்து ஏடிஎம்களின் சேவை முடங்கி, 48 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் என்றும், தமிழகத்தில் 20 ஆயிரம் ஏடிஎம்களின் சேவை முடங்கி, 6 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.