Skip to main content

ஆந்திர கிராமத்தில் கைதிகளைத் தேடிய புழல் சிறை அலுவலர்கள்! -'தீரன் அதிகாரம் ஒன்று' சினிமா போல் விரட்டியடிப்பு!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

ccc


ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறி மூட்டையில் கடத்தி வந்த கஞ்சாவை, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு திருவள்ளூரில் கைப்பற்றியது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளில் இருவர், தங்களது வழக்கறிஞர் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தனர். அந்த மனு தள்ளுபடியாகி, அது குறித்த உத்தரவு புழல் சிறைக்கு வந்தது. அது தள்ளுபடி உத்தரவு என்பதைக்கூட சரியாகக் கவனிக்காமல், பிணை உத்தரவு என்று கருதி, ‘தேவையான நடவடிக்கை எடுக்கவும்’ என்று எழுதிவிட்டார், கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன். பிறகென்ன? சிறை அலுவலர் குணசேகரன், தண்டனை குறைப்பு பிரிவு எழுத்தர் கோடீஸ்வரன்,  முதல்நிலை தலைமைக் காவலர் கணேசமூர்த்தி ஆகியோர், சிறை கண்காணிப்பாளரே சொல்லிவிட்டார் என்று, கைதிகள் இருவரையும் ‘ரிலீஸ்’ செய்துவிட்டனர். 

 

 

சிறை விதிகளின்படி, பிணை உத்தரவு பிரகாரம் கைதி ஒருவரை ரிலீஸ் செய்வதாக இருந்தால், அவர் மீது பழைய வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்று சரிபார்த்த பிறகே, பிணையில் அனுப்ப வேண்டும். மேலும், கைதிகளைப் பிணையில் விடும் அதிகாரமானது, கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளருக்கு மட்டுமே உண்டு. ஆனால், புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனோ, ஜெயிலர், ரெமிசன் கிளார்க் போன்றோரிடம் பிணையில் விடும் பணியை ஒப்படைத்துவிட்டார். தவறுதலாக இருவரை சிறையிலிருந்து வெளியேற்றியது, கடந்த 5-ஆம் தேதிதான் தெரிய வருகிறது. ‘மோசம் போய்விட்டோமே’ என்று அடித்துப்பிடித்து, குணசேகரன், கோடீஸ்வரன், கணேசமூர்த்தி ஆகிய மூவரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரோடு சேர்ந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போய் இரண்டு கைதிகளையும் தேடினார்கள். கைதிகளின் சொந்த கிராமமோ, தீரன் அதிகாரம் ஒன்று சினிமா ரேஞ்சுக்கு, இவர்களை விரட்டிவிட்டது.  
 

இந்த சூழ்நிலையில், விசாகப்பட்டினம் ரசாயண ஆலையில் விஷவாயுக் கசிவு விவகாரம் பெரிதாக வெடிக்க, அத்தனை காவலர்களும் அங்கு போய்விட்டனர். கைதிகளைப் பிடிப்பதற்கு விசாகப்பட்டினம் காவலர்களின் உதவி கிடைக்காததால், சென்னையிலிருந்து கிளம்பிய சிறை ஊழியர்கள், தற்போது விசாகப்பட்டினம் சிறையில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். 
 

இதே ரீதியில், உயர் நீதிமன்ற உத்தரவை புரிந்துகொள்ளாமல் கைதிகளைத் தவறுதலாக ரிலீஸ் செய்தது இதற்கு முன்பும் நடந்துள்ளது, கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் ‘டோஸ்’ வாங்கியிருக்கிறார், சிறைத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு வந்திருக்கிறார், சுனில்குமார் சிங். கண்காணிப்பாளர்கள் கூட்டத்தைக் கூட இன்னும் அவர் நடத்தவில்லை என்று சிறைத்துறை வட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர். 
 

தமிழக சிறைத்துறை எப்போது சீராகுமோ?  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.