Skip to main content

சுதீஷை மிரட்டினார்களா? பிரஸ் மீட் பின்னணி! 

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய தேமுதிக இதோ அதோ என அதிமுகவிற்கு பிலிம் காட்டிவரும் நிலையில், நேற்று பிரதமர் மோடி சென்னையில் கலந்துகொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் தேமுதிகவும் பங்குபெறுவதாக பேசப்பட்டது. 

 

ஆனால் இறுதி கட்டத்தில் தேமுதிக அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்ட மேடையில் வைக்கப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களில் விஜய்காந்தின் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. 

 

su

 

நேற்று காலை பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய குழு தேமுதிக துணைச்செயலாளர் சுதீசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

 

அதேநேரத்தில் திமுகவுடன் கூட்டணி பேசுவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகளான அனகை முருகேசன், சேலம் இளங்கோவன் ஆகியோரை திமுக பொருளாளர் துரைமுருகனிடம் அனுப்பிவைத்திருந்தார் சுதீஷ். முன்னதாக துரைமுருகனிடம் சுதீஷும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். 

 

d

 

இதற்கிடையே பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதால் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக அமைச்சர் தங்கமணி, வேலுமணி சுதீஷிடம் பிறகு பேசுகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். 

 

s

 

இந்தநிலையில் திமுகவோடு தேமுதிக கூட்டணி பேசியது திமுகவின் பொருளாளரான துரைமுருகன் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து, என்னிடம் தேமுதிக நிர்வாகிகள் நேரில் வந்து பேசினார்கள், அதற்கு முன் சுதீஷ் போனில் பேசினார். நான் அவர்களிடம் சொன்னது, எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. இனி இங்கு இடமில்லை என கூறி அவர்களை அனுப்பிவிட்டேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார்.    

 

ஏற்கனவே கூட்டணி பேசிவருகிற அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காக கூட்டணியில் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுப்பதற்காகவும் இப்படி ஒரு ஸ்டண்டை தேமுதிக நடத்தியுள்ளதை திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி மூலம் அம்பலமானது. 

 

மோடி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றபிறகு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சுதீஷ் தனியார் ஓட்டலில் பேசியிருக்கிறார். 

 

n

 

அப்போது அதிமுக நிர்வாகிகள் சுதீஷை பார்த்து காட்டமாக,  ''இந்த வேலையெல்லாம் வச்சிக்காதிங்க. தொகுதி எண்ணிக்கை முன்பின் இருக்கலாம், எந்தெந்த தொகுதி என்பதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மத்த டீலிங் எல்லாம் உங்களின் எதிர்பார்ப்புப்படியே செய்தோம்.   மேலும் செய்யப்போகிறோம்.  இப்படி இருக்க திமுகவுடன் பேசுவது என்ன பிளாக் மெயிலா? இதை திமுக பொருளாளராக துரைமுருகனின் வெளியடையான பேச்சு உங்களை அம்பலப்படுத்திவிட்டது. சரி இப்பொழுது கூட்டணியை முடிவு செய்கிறோம். ஆனால் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதை  எப்படி மறுக்கப்போகிறீர்கள். முதலில் அந்த வேலையை செய்யுங்கள்'' என அதிமுக நிர்வாகிகள் சுதீஷிடம் கூறியிருக்கிறார்களாம். 

 

o

 

இந்த பின்னணயில்தான் தேமுதிக சுதீஷ் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து திமுக பொருளாளர் துரைமுருகனை எங்கள் கட்சியின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்கள். துரைமுருகனிடம் நான் பேசவே இல்லை என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் இந்த விளக்கம் ''எங்க அப்பன் குதிருக்குள் இல்லை'' என தேமுதிகவிற்கு திருப்பியடித்துள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று நான் காரில் வரும்போது சுதீஷ் போனில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகிகள் என்னை நேரில் வந்து பார்த்தார்கள். நான் திமுகவில் இடமில்லை என திருப்பி அனுப்பினேன்.  அய்யோ பாவம் தேமுதிகவின் நிலை பரிதாபமாக உள்ளது என விளக்கமளித்திருந்தார்.

 

v

தேமுதிகவின் அரசியல் ஸ்டண்ட் இரட்டை முகமாக அதிமுக மற்றும் திமுகவில் அம்பலமாகியதோடு முதலில் கூட்டணிக்காக அதிமுகவை டீலிங் விஷயத்தில் மிரட்டிவந்த தேமுதிக இப்போது  அக்கட்சியாலேயே மிரட்டப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.