Skip to main content

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

 

jk

 

 இலங்கை கண்டியில் பிறந்த சிவக்குமார் என்கிற ரித்திஷ்  ராமநாதபுரத்தில் குடியேறினார். ’சின்னபுள்ள’படத்தில் அறிமுகமானார்.  கானல்நீர், நாயகன், பெண்சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில்  இவர் நடித்த எல்.கே.ஜி. படம் பலராலும் பாராட் டப்பட்டது.     


2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம்  தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 2,94,945 வாக்குகள் பெற்று 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  பதவியேற்பின்போது ரித்திஷின் நடை,உடை, தோற்றத்தை பார்த்து ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தி விசாரித்ததாகவும், ப.சிதம்பரம் இவரைப்பற்றி கூறிய தாகவும் அப்போது தகவல் வெளியாகின.

 

ராமநாதபுரம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், 2014ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். சென்னை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் அவர் இணைந்தார்.  ஜெ. மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில்  இருந்தவர் பின்னர் எடப்பாடி அணிக்கு மாறினார்.
 

 நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ரித்திஷ்.  திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், இவருக்கு தாத்தா என்று கூறப்பட்டது. ஆனால், பின்னாளில் தாத்தா பேரனுக்கும் இடையே மோதல் வெடித்தது.  

 

ஜ்க்

 

மறைந்த ரித்திஷுக்கு  ஜோதீஷ்வரி என்ற மனைவியும் ஆரிக் ரோசன் என்ற மகனும் உள்ளனர்.  

 

குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்திருந்தார்.   இவரால் உதவி பெற்றவர்கள் பல ஆயிரம்  பேர்  இருக்கும் என்கிறார்கள்.  கோடம்பாக்கத்தில் இவரை வள்ளல் என்றே அழைத்து கட்-அவுட் வைத்து வந்தனர்.
 

ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், கருணாஸ் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரி வித்துள்ளனர். 

 

வேறு இயக்கத்தில் சேர்ந்தாலும் தனது பழைய நட்பை மறவாதவர் ரித்திஷ்.  அவருடைய மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.