ADVERTISEMENT

'43,86,379 மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

11:34 AM Jun 05, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நாடு முழுவதும் இன்று (05/06/2020) காலை 09.00 மணிவரை 43,86,379 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


கடந்த 24 மணிநேரத்தில் 1,43,661 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் நேற்று வரை (04/05/2020) 5,44,981 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று (04/06/2020) ஒரு நாள் மட்டுமே 16,447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT