அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்றோடு இதற்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்தது. மதியம் 3 மணிக்கு நிறைவடைய வேண்டிய வேட்புமனுதாக்கல், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இரவுவரை தொடர்ந்தது. இந்நிலையில் இன்று அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி வரை திரும்பப்பெறுவதற்கு அவகாசம் உள்ளது என்பதும், நாளை முதல் கட்சித்தலைவர் பிரச்சாரம் செய்யவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.