Skip to main content

33.62 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை!- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

33.62 lakhs coronavirus testing icmr


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இன்று (28/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன. 
 


இந்த நிலையில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (27/05/2020) வரை 4,42,970 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்த மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று (28/05/2020) காலை 09.00 மணி வரை நாடு முழுவதும் 33,62,136 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. குறிப்பாக 24 மணிநேரத்தில் மட்டும் 1,19,976 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீபெரும்புதூரில் ட்ரோன் சோதனை மையம்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Drone Test Center at Sri Perumbudur
கோப்புப்படம்

 

தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொது சோதனை மையங்களை அமைக்கத் தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது.

 

இந்தியாவில், இத்தகைய சோதனை மையம் கர்நாடக மாநிலம், சித்திரதுர்காவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தனது பயன்பாட்டிற்காக உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், மோட்டார்கள், பேட்டரி உட்பட பல்வேறு பாகங்களைத் தனித்தனி மையங்களில் சோதனை செய்து வருகின்றன.  இது செலவினத்தை அதிகரிப்பதோடு. சோதனைகளை மேற்கொள்ளக் காலதாமதமும் ஆகின்றது. இந்த இடர்பாடுகளைக் களையும் நோக்கத்துடன் மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க டிட்கோ (TIDCO) நிறுவனம் திட்டமிட்டது.

 

இதையொட்டி மத்திய அரசின் மானியத்துடன் செயல்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்த நான்கு நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்திலேயே சர்வதேச தரத்தில் வழங்கும். இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.