Advertisment

வெளியேறப்போகிறது 3 லட்சம் கன அடி நீர்..! 15 மாவட்டங்களுக்கு கடும் வெள்ள அபாயம்..!

காவிரியில் வெள்ள அபாயம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு கர்நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2.50 லட்சம் கன அடி நீர் அப்படியே மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு காவிரி ஆறு ஒடும் 15 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Advertisment

தற்போது அதைவிட அபாயம் உருவாக உள்ளது என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை ஏற்கனவே நிரம்பியதால்1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் இரண்டு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நிரம்ப இன்னும் ஐந்து அடியே பாக்கி உள்ளது.

பவானிசாகர் அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் பவானிசாகர் அணை நிரம்பி விடும் அதன் பிறகு அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு அது பவானி கூடுதுறையான காவிரி ஆற்றில் கலந்து காவிரியுடன் வெளியேறும் நாளை மதியத்திற்கு பிறகு காவிரி ஆற்றில் 2.50 லட்சம் கன அடி நீர் கரை புரண்டு ஒட உள்ளது.

கன மழை தொடர்ந்து நீடித்தால் மேட்டூர் அணைக்கும் பவானிசாகர் அணைக்கும் நீர் வரத்து மேலும் கூடும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இது காவிரி கரையோரத்தில் வாழும் மக்களுக்கு கடும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தப்போகிறது என்கிறார்கள்.

cauvery flood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe