Advertisment

ஒவ்வொருத்தருக்கும் 25சி -தினகரன் எம்.எல்.ஏக்களை வளைக்கும் எடப்பாடி!!!

dinakaran

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் 19பேர் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக கடந்த ஜனவரியில் தமிழக கவர்னரிடம் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சராக உள்ள எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என்றும் வேறொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றும் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவர்னரிடம் கொடுத்ததாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 19பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில் அதிமுக எம்.எல்.ஏ. ஜக்கையன் திரும்பவும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்ததால் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மீதியுள்ள 18பேரை தகுதி நீக்கம் செய்தார் சட்டப்பேரவைத் தலைவரான தனபால். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ல் நிறைவுபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புதான் 14.6.2018 மதியம் உயர்நீதிமன்றத்தில் வழங்க உள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111பேர் ஆதரவாக உள்ளனர். தினகரன் அணியில் 4பேர் சுயேட்சையிலான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் இருக்க திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவரும் நிலையில் ஆளும் அதிமுக அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இதை எதிர்கொள்ள தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு மாதமாக தினகரன் அணியிலுள்ள 18பேரில் 8பேரை தங்கள் வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் அமைச்சர் தங்கமணி. 13ம் தேதியிலிருந்து தீர்ப்பு 14ம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அமைச்சர் தங்கமணி நேரடியாக களத்தில் இறங்கி பேசவேண்டியதை பேசினார். தீர்ப்பு எப்படிவேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை 18எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு குறித்த சபாநாயகரின் உத்தரவு தவறு என வந்தால் ஆளுங்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தில் இறங்கிய தங்கமணி, புதன்கிழமை தினகரன் அணியிலிருந்த 8 எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்பில் உள்ளார். ஒவ்வொருவருக்கும் 25சி என பேரம் போயுள்ளது. இதில் வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணியின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளார். ஆக முதலமைச்சர் பதவியை தக்கவைக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்த்திரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எட்டுபேரை வளைத்துக்கொண்டுபோக அமைச்சர் தங்கமணி இரவு பகலாக செயல்பட்டுவருகிறார். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக தொடரவும் என்ற உத்தரவு வந்தால் அமைச்சர் தங்கமணியின் இந்த சித்து விளையாட்டு நடக்கும் என்கிறார்கள் அதிமுக ர.ரா.க்கள்.

admk ammk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe