Skip to main content

ஒவ்வொருத்தருக்கும் 25சி -தினகரன் எம்.எல்.ஏக்களை வளைக்கும் எடப்பாடி!!!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
dinakaran

 

 

 

அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் 19பேர் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக கடந்த ஜனவரியில் தமிழக கவர்னரிடம் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சராக உள்ள எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என்றும் வேறொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றும் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவர்னரிடம் கொடுத்ததாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் 19பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில் அதிமுக எம்.எல்.ஏ. ஜக்கையன் திரும்பவும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்ததால் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு மீதியுள்ள 18பேரை தகுதி நீக்கம் செய்தார் சட்டப்பேரவைத் தலைவரான தனபால். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஜனவரி 23ல் நிறைவுபெற்று தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புதான் 14.6.2018 மதியம் உயர்நீதிமன்றத்தில் வழங்க உள்ளது.

 

 

இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111பேர் ஆதரவாக உள்ளனர். தினகரன் அணியில் 4பேர் சுயேட்சையிலான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் இருக்க திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவரும் நிலையில் ஆளும் அதிமுக அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இதை எதிர்கொள்ள தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு மாதமாக தினகரன் அணியிலுள்ள 18பேரில் 8பேரை தங்கள் வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளார்கள். இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் அமைச்சர் தங்கமணி. 13ம் தேதியிலிருந்து தீர்ப்பு 14ம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அமைச்சர் தங்கமணி நேரடியாக களத்தில் இறங்கி பேசவேண்டியதை பேசினார். தீர்ப்பு எப்படிவேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை 18எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு குறித்த சபாநாயகரின் உத்தரவு தவறு என வந்தால் ஆளுங்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தில் இறங்கிய தங்கமணி, புதன்கிழமை தினகரன் அணியிலிருந்த 8 எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்பில் உள்ளார். ஒவ்வொருவருக்கும் 25சி என பேரம் போயுள்ளது. இதில் வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணியின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளார். ஆக முதலமைச்சர் பதவியை தக்கவைக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்த்திரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எட்டுபேரை வளைத்துக்கொண்டுபோக அமைச்சர் தங்கமணி இரவு பகலாக செயல்பட்டுவருகிறார். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக தொடரவும் என்ற உத்தரவு வந்தால் அமைச்சர் தங்கமணியின் இந்த சித்து விளையாட்டு நடக்கும் என்கிறார்கள் அதிமுக ர.ரா.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.