Skip to main content

மதுரையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: என்கவுன்டர் நடந்தது எப்படி?

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
encounder

 

மதுரையில் சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் இன்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

 

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண் அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து 2 ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

madurai police

 

 இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் நிருபர்களிடம் பேசுகையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க சிக்கந்தர் சாவடி பொன்வேல் நகருக்கு செல்லூர் போலீசார் குழு வந்தனர். இந்நேரத்தில் பிஸ்டல் வைத்து தாக்க முயற்சித்தனர். ரவுடிகள் சுட முயன்றதை அடுத்து தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்யப்பட்டது. ஒரு போலீசாரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விசாரித்து வருகிறோம். சிறிது நேரத்தில் முழு விவரத்தை தெரிவிக்கிறோம் என்றார். 

 

saguni

 

மதுரை மாவட்டம் வரிசியூர் அருகே உள்ள பொட்டப்பனையூரைச்சேர்ந்தவர் முத்து இருளாண்டி.  பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முத்து இருளாண்டி தலைமறைவாக இருந்து வந்தார்.  முத்து இருளாண்டி மீது மதுரை தெப்பக்குளம், அவனியாபுரம், விளக்குத்தூண், செல்லூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல்   உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

 

சகுனி கார்த்திக் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர்.  பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முத்து இருளாண்டி தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.   காளி என்கிற வெள்ளைக்காளி என்பவரின் குழுவைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்படுகிறார்.  தெப்பக்குளம், விளக்குத்தூன், கீரைத்துறை, செல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
2 raiders passed away in encounter

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று (26-12-23) காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து நடந்து சென்ற போது ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பிரபாகரனை கொலை செய்த ரகு மற்றும் ஹசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்தனர். 

அப்போது, ரகு மற்றும் ஹசன் ஆகியோர் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மீட்கப்ப்ட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

என்கவுண்டர் நடந்த இடத்தில் நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டு பறிமுதல்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

A country gun and petrol bomb were seized from the place of encounter

 

திருச்சியில் என்கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி வருகிறார்.

 

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன். ரவுடி கொம்பன் ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்த ரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

add

 

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண், மாவட்ட காவல்துறை துணை தலைவர் பகலவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டது. நடத்தப்பட்ட ஆய்வில் அந்த இடத்தில் ரவுடி ஜகன் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு, அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.