சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிப் 2- தேதி மதியம் 12 மணியளவில் 87 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து கார் மூலம் சிதம்பரத்திற்கு தமிழக ஆளுநர் ரவி வருகை தந்தார். பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதற்கு முன்னதாக இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இவரை கோவில் தீட்சிதர்கள் கும்பல் மரியாதையுடன் வரவேற்று சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
சிதம்பரத்திற்கு ஆளுநர் வருகையையொட்டி சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ஆளுநர் செல்லும் வழிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Follow Us