தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பு, சென்னை லோக் பவனில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து சென்ற நிலையில், கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது உற்று கவனிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, திமுக அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் அடங்கிய மனுவை கவனர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார் என்கிறது அதிமுக வட்டாரம்.

Advertisment