Desolate wilds; Sleeping with a female corpse; A brutal act by a young man

திருமணமான பெண் ஒருவர் முறையற்ற தொடர்பில் இருந்த ஆண் நண்பருடன் காட்டுப்பகுதியில் இருந்த பங்களாவிற்கு சென்ற நிலையில், பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பெதுரா பகுதியில்வசித்து வந்தவர் சுனிலா. திருமணமான இவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருக்கு ஒரு மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அச்சு என்று 24 வயது நபருடன் உரையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்பிலிருந்த அச்சு, சுனிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், அச்சுவின் அழைப்பின்படி திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு செல்வதாக சுனிலா தன்னுடைய கணவரிடம் கூறிவிட்டு அச்சுவை சந்திக்க சென்றுள்ளார்.

Advertisment

அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள பாழடைந்தபங்களா பங்களா ஒன்றுக்கு சுனிலாவை அச்சு இரவு நேரத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது தன்னுடைய கல்யாண ஆசையை அச்சு சுனிலாவிடம் தெரிவித்துள்ளார். 'இப்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியாது பொறுமையாக இரு' என சுனிலா கூறியுள்ளார். ஆனால் பேசிக் கொண்டிருந்தஇருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆத்திரமடைந்த அச்சு சுனிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் இரவு முழுக்க பங்களாவில் சுனிலாவின் சடலத்துடன் உறங்கியுள்ளார். மனைவியை காணவில்லை என கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்த அச்சுவை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.