கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அரவிந்த், தமிழேந்தன் இருசக்கர வாகனத்தில் புவனகிரியில் இருந்து வீடு திரும்பும் போது எதிரே சிதம்பரம் நோக்கி நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கி கொண்டு அரவிந்த் மற்றும் தமிழேந்தன் ஆகிய இளைஞர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.

Advertisment

இந்நிலையில் உயிரிழந்த அரவிந்த் மற்றும் தமிழேந்தன் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து  நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். இதனால் விருதாச்சலம் கடலூர் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையின் இரு புறமும் எந்த வாகனமும் இயங்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் சிதம்பரம் டி.எஸ்.பி. சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ஆகியோர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

Advertisment

இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்த இருவரது உடலும் அரசு மருத்துவமனைக்கு பிரதே  பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரான நிலையில் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.