மத்தியப் பிரதேசத்தில் கலப்பட இருமல் சிரப் குடித்து 26 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின் வழக்கில், முக்கிய குற்றவாளியான மருத்துவர் பிரவீன் சோனி உட்பட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்தை உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

Advertisment

அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை மீறி தடை செய்யப்பட்ட இருமல் சிரப்பை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிய மருத்துவர் பிரவீன் சோனியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சிரப் குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர் அக்டோபர் 5, 2025 அன்று கைது செய்யப்பட்டதில் இருந்து சிந்த்வாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது, ​​நாக்பூரைச் சேர்ந்த ஒரு மூத்த மருத்துவர் சோனியிடம்  மருந்தை வழங்க வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் தெரியவந்தது.

ஜாமீன் கோரி மருத்துவர் பிரவீன் சோனி தொடரப்பட்ட வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. 'முக்கியமான விஷயம் என்னவென்றால், மருந்தை நிலையான டோஸ் கலவையின்படி வழங்கலாம் என்று மத்திய அரசு விதி உள்ளது. ஆனால் சோனி நிலையான டோஸ் சேர்க்கை மருந்தின் அளவைப் பின்பற்றவில்லை. நாக்பூரைச் சேர்ந்த ஒரு மூத்த மருத்துவர் இந்த மருந்தைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதையும்  மருத்துவர் டோனி அந்த ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.

இது ஒரு தீவிரமான சம்பவம். மருந்தை விற்பதன் மூலம் சோனிக்கு கிடைத்த கமிஷனின் பேராசை காரணமாக, குழந்தைகள் இறக்கும் சூழ்நிலையை அவர் உருவாக்கியதாக வாதம் வைக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment