Advertisment

கே.என்.நேருக்கு எதிரான வழக்கு; அதிமுகவின் மனுவை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்!

knnehru

Court Registry returns petition Case against K.N. Nehru

கே.என்.நேரு அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சில தினங்களுக்கு முன்பு, குற்றம் சாட்டியது. அதாவது இந்த துறையில் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழல் ரூ.1,020 கோடி வரை நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது திமுக அரசும் காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனால் இதையடுத்தும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என இன்பதுரை எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று (07-04-26) தாக்கல் செய்தார். இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவில் பிழைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பிழைகளை திருத்தம் செய்யக் கோரி அந்த மனுவை உயர் நீதிமன்ற பதிவுத்துறை திருப்பி அனுப்பியுள்ளது. 

K.N.Nehru kn nehru
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe