கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக 7 மாவட்டங்களில், 3 மாநகராட்சிகள், 39 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 471 ஊராட்சிகளில் 11 ஆயிரத்து 166 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 7 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 47 நகராட்சிகள், 77 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், இன்று (13-12-25) வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கேரளாவில் இருக்கக்கூடிய 14 மாவட்டங்களில் உள்ள 244 மையங்களில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த உள்ளாட்சி தேர்தல் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/keralacount-2025-12-13-09-45-15.jpg)