சட்டமன்ற கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (23-01-26) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை நீக்கி அதற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

Advertisment

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகின்ற திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும் அனைத்து திட்டங்களும் இது மாநில அரசு திட்டம், இது ஒன்றிய அரசின் திட்டம் என பாகுபாடு காட்டாமல் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. ஒன்றிய அரசின் பல முன்னோடி திட்டங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு செயல்பாடு அளவில் முதன்மையாக இருப்பதோடு பல ஒன்றிய அமைச்சர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாக கொண்டிருப்பதை நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் காலதாமத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  

Advertisment

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலும் கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் 2025-2026ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிக குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1,026 கோடி ரூபாய் ஊதியத்திற்கான தொகையை இன்று வரை விடுவிக்காப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான். இப்படி நிதி விடுவிப்பதில் தாமதம் காட்டுவதால் தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை?. இந்த வஞ்சனையை மிஞ்சக்கூடிய அளவுக்கு கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேட்டு வைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினை மாற்றி அதற்கு பதிலாக  வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் என்று தமிழ் பொருள்படும் விபி ஜி  ராம் ஜி என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி யுள்ளது. ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு ஊரக பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை  உறுதி செய்தும், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடல் உழைப்பை தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 % அதிகமானோர் பெண்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விபி ஜி ராம்ஜி திட்டத்தை அறிமுக  நிலையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.  அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல்  எழுப்பி இருக்கிறது. ஏனினும் மக்கள் குரலை  மதிக்காத ஒன்றிய அரசு, அந்த திருத்த  சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்த புதிய  திட்டமானது மக்களின் தேவை அடிப்படையில் அமைக்கப்படவில்லை.  இது குறித்து நான் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த புதிய  வளர்ச்சி அடைந்த இந்தியா ஊரக வேலை உறுதி  மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ்  வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற  அடிப்படையில் இல்லாமல் ஒன்றிய அரசால்  நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச  ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். 

Advertisment

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  சட்டம் 2005ன்படி கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்  என்றும் மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தின் மாநில செயல் திறன்  அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு  செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்  மகாத்மா காந்தி தேசிய தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் , ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின்  வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட சமூக பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய  ஆண்டுகளின் ஒதுக்கீட்ட குறையாமல்  ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் உத்தேச மதிப்பீட்டின்  அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு  நிதி ஒதுக்கீடு செய்யும் என உள்ள தற்போது  புதிய நடைமுறையை கைவிட்டு ஏற்கனவே  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தின் கீழ் பின்பற்றப்பட்ட  வேலைக்கான தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு  செய்யும் நடைமுறையை தொடர வேண்டும்.

மேலும் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசை வகுத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இப்புதிய திட்டத்தில் மாநில  அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமாக  உயர்த்தப்படுகையில் மாநில அரசு நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே புதிய திட்டத்திற்கான நிதி பங்களிப்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி பங்களிப்பினை போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களை  கொண்டு இத்திட்டத்திற்கு வளர்ச்சி அடைந்த  இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதர இயக்கம் ஊரகம் விபி ஜி ராம்ஜி என பெயர்மாற்றம் செய்யப்ப செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்து தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவு கூறும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலே தொடர வேண்டும் என்றும் ஒன்றிய  அரசை இப்பேரவை ஒருமனதாக வெளியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.