Advertisment

“கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி 9 பேர் உயிரிழப்பு” - முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

cd-bus-mks-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் எழுத்தூர் கிராமத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  இந்த சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை எழுத்தூர் கிராமம் அருகில் இன்று (24.12.2025) மாலை சுமார் 07.30 மணியளவில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்  அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. 

Advertisment

இந்த  பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில், பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

Advertisment

இந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

bus Cuddalore govt bus mk stalin setc
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe