Advertisment

சென்னை சங்கமம்! -பாடல் இயற்றிய கனிமொழி எம்பி

646

Chennai Sangamam! -Kanimozhi MP composed the song Photograph: (kanimozhi)

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கலை நிகழ்ச்சி இன்று (14/01/2026) மாலை 6 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார். இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Advertisment

தொடக்க விழாவில் பாடப்படவுள்ள பாடல் வரிகளை, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுதியுள்ளார். அந்தப் பாடல் வரிகள்:

Advertisment

வானமில்லை பூமியில்லை 
வாளுமில்லை போரும் இல்லை 
நோயுமில்லை சாவுமில்லை
நாடுமில்லை வேலியில்லை
சாதியில்லை மதமுமில்லை
ஏற்றமில்லை
வறுமையில்லை
எல்லையற்ற அன்புதான்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

வாழ்வின் வளங்கள்
நமது தான் 
அழகே தமிழே ஒளியே
உயிரே

எம்மைச் சேர்க்கும் 
பற்றுக்கோடு ஒன்றுதான்
மொழியே தருவே 
உயிரே உறவே 
எத்தனை பகை 
திரண்டு நின்றாலும் 
உரிமைதனைப் பறிக்க நினைத்தாலும்
எழுவோம் ஒன்றாய்
முரணாய் அரணாய்

எம்மை கோர்க்கும் சேர்க்கும் 
பெருமைக் கோடு ஒன்றுதான் 
பெருகும் அழகே தமிழே
முக்கடல் ஆண்ட மூவேந்தன் 
மூத்தோன் எழுதிய கதிரின் ஒளியே
அருவிநீர் போல 
காற்றின் மீதேறி 
காலம் உரமேற்றும்
வாழும் என் மொழியே
பகை பலவந்தாலும்
வேடம் தரித்தாலும் 
விஷத்தை விதைத்தாலும்
உரிமைதனை பறித்தாலும்

எழுவோம் அரணாய்
திராவிட முரணாய் 
தொடுவானம் தூரமில்லை
சொல்லும் பகை என்றுமில்லை
எங்கும் தமிழ் வெல்லும் தமிழ்
உரக்கச் சொல்வோம்
சேர்ந்து சொல்வோம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
வெற்றி நிச்சயம்.

dmk kanimozhi karunanidhi pongal celebraion song song writer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe