Advertisment

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

rain-our-4

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவானது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (04.12.2025) காலை 07:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு  ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (04.12.2025) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை  இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Advertisment

அதே சமயம் மழை எச்சரிக்கை காரணமாக  பள்ளிகளுக்கு இன்று (04.12.2025) விடுமுறை  தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன். அதன்படி சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த இரு மாவட்டங்களில் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chennai holiday north east mansoon rain schools
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe