Advertisment

“இந்த செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது” - தி.மு.க. அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

nainar-mic-6

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.  இதில் பணிபுரிந்து வரும் வடமாநில பெண் ஒருவரிடம், சிவசக்தி நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் சதீஷ் (வயது 24), உல்லாசநகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உத்தமராசு (வயது 19) ஆகியோா் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் இதுகுறித்து  போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 இளைஞா்களையும் கைது செய்தனா்.

Advertisment

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி!’ எனக் குறிப்பிட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் வடமாநிலப் பெண் ஒருவருக்கு, சூளைக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் இருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. 

Advertisment

கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், கைதுகளும் தான் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனவே தவிர, குற்றங்கள் ஏனோ குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்கள் மீதும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறையானது, வரம்பின்றி நீண்டு கொண்டிருக்கிறது. பொதுவெளியில் கொஞ்சம் கூட தார்மீகப் பொறுப்பின்றி வட இந்தியர்களை வடக்கன், பானிபூரி விற்பவன், டேபிள் துடைப்பவன் எனத் திமுக தலைவர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசுவது தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கான தூண்டுகோல் என்பதை ஆளும் தலைமை இன்னும் உணர்ந்து கொள்ளாதது அறியாமையின் உச்சம். 

anna-arivalayam-1

வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றும் நமது பாரதத்தில், தமிழகத்தில் மட்டும் மற்ற மாநிலத்தவர்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகும் திமுக-வின் பிளவுவாத அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். 

tn govt mk stalin dmk b.j.p nainar nagendran arrested police woman north indian Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe