திருச்சியில் காவலர் குடியிருப்பு உள்ளே நுழைந்து சரமாரியாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரம் சென்ற இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் விரட்டிய நிலையில் உயிர் பயத்தில் ஓடிய அந்த இளைஞர் அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்துள்ளார். விடாமல் இளைஞரை பின் தொடர்ந்து காவலர் குடியிருப்புக்கு உள்ளே சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை வெறிதாக்குதல் நடத்தியது. இதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சிக்கு தமிழக முதல்வர் வந்திருந்த நிலையில் திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்புக்கு உள்ளே புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/a5723-2025-11-10-12-28-54.jpg)