Advertisment

அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தர் குழு உறுப்பினர் பொறுப்பேற்பு!

Untitled-1

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினராக இருந்த டி. அருட்செல்வி மாற்றம் செய்யப்பட்டு, புதிய துணைவேந்தர் குழு உறுப்பினராக வேளாண்மைப் புலத்தைச் சேர்ந்த பூச்சியியல் துறைப் பேராசிரியரும், உள் தரக் கட்டுப்பாடு உறுதி மைய இயக்குநருமான முனைவர் எஸ். அறிவுடைநம்பி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

Untitled-2

புதிய துணைவேந்தர் குழு உறுப்பினர் எஸ். அறிவுடைநம்பி துணைவேந்தர் அலுவலகத்தில் திங்கட்கிழமை பொறுப்பேற்றார். நிகழ்ச்சியில் பதிவாளர் எம். பிரகாஷ், முன்னாள் துணைவேந்தர் குழு உறுப்பினர் டி. அருட்செல்வி, புல முதல் நிலையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment
vice chancellor Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe