Advertisment

குளியல் அறையில் ரகசிய கேமரா; “பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா?” - அன்புமணி கேள்வி!

anbumani-mic-1

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். அந்த வகையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் இயங்கி வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்துள்ளது. இதனை அங்குள்ள பெண்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், குளியல் அறையில் கேமரா வைக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று (04.11.2025) இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் கேமராவை வைத்த வட மாநிலத்தைச் சேர்ந்த நீலாமாரி குப்தா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் ஏன் குளியல் அறையில் கேமரா வைத்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா?. கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும்  விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

hsra-tata-company-hostel-issue

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும்,  டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதாக ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண்  தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

tn govt anbumani ramadoss pmk hidden camera women hostel Hosur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe