Advertisment

சட்டப்பேரவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..? - இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!

Eps

சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிவிட்டது. இன்றைய பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டனர். 

Advertisment

சட்டமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அதிமுக அறையில் எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவையில் இன்றைய தினம் மற்றும் அடுத்த மூன்று நாட்களிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இபிஎஸ் ஆலோசனைகள் வழங்கினார். 

Advertisment

இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கரூர் துயரத்துக்கும், முன்னாள் எம்.எல்.ஏக்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்ட மவுன அஞ்சலி செலுத்தப்படுவதோடு இன்றைய நிகழ்ச்சி நிரல் முடிந்துவிட்டது. எனினும், கரூர் துயரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என்று தெரிகிறது. கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe