அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, இன்று (10.12.2025) காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். முன்னதாக அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுதினார். அதே சமயம் அக்கட்சியின் அவைத் தலைவரும், இன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய தமிழ்மகேன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக செய்குழுவின் தற்காலிக அவைத் தலைவராக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டு செயற்குழு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஒரு பகுதியாக, பல்வேறு காலங்களில் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் எனப் பலருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதோடு நாகாலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் இல. கணேசன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து, விற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்த அனைவரும் இரு நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/admk-meeting-general-body-mk-muthu-2025-12-10-11-08-15.jpg)