Advertisment

எலும்புக் கூடாக மிதந்த ஆண் சடலம்- விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் அதிர்ச்சி

a5032

A man's body floating in well- Shock at the place where the Ganesha idol was melted Photograph: (salem)

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அருகே கிணற்றில் எலும்புக் கூடாக சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தற்பொழுது விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. போலீசார் பாதுகாப்புடன் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அருகே உள்ள சந்திரா கார்டன் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விநாயகர் சிலையை  கரைப்பதற்கு  அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

a5033
A man's body floating in well- Shock at the place where the Ganesha idol was melted Photograph: (salem)

அதற்காக கிணற்றைச் சுத்தம் செய்தபோது கிணற்றில் ஒரு ஆண் சடலம் எலும்புக் கூடாக மிதந்து. உடனடியாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police Salem vinayagar chaturthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe