Advertisment

'ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்'- நீதிமன்றம் தீர்ப்பு

புதுப்பிக்கப்பட்டது
a5003

'22 people guilty in Ambur riot case' - court verdict Photograph: (thirupathur)

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு பவித்ரா என்பவர் காணாமல் போன சம்பவத்தில் ஷமீல் அகமது என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஷமீல் அகமது உயிரிழப்புக்கு காவல் துறையே காரணம் என அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் பொழுது திடீரென கலவரம் வெடித்தது. இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட காவல் வாகனங்களும் சேதமடைந்தது. ஆம்பூர் கலவரம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 25 லட்சம் மதிப்புடைய அரசு சொத்துக்கள் சேதமாகின. இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவட்ட நீதிபதி மீனா குமாரி வழங்கிய தீர்ப்பில், 'மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். 22 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்ற அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. பாதுகாப்பு வழங்காததால் உரிய தோகையை முதலில் தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டும். கலவரத்திற்குக் காரணமான போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய முன்னாள் எம்எல்ஏ அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல்  செய்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ambur thirupathur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe