தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பிப்ரவரி ஆறாம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் மற்ற நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சட்டமன்ற தேர்தலை எழுச்சியுடன் சந்திக்கிறோம்'' என என்.ஆனந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகிக்கப்படுவதால் தவெக கூட்டணி கதவுகளை மூடி விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/03/830-2026-02-03-12-41-50.jpg)