Skip to main content

ரஜினியும், கமலும் எனக்கு ஜூனியர்கள் தான்: விஜயகாந்த் கிண்டல்!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
dmdk-vijayakant

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா A1 குற்றவாளி என்பதால் சட்டசபையில் படத்தை திறக்க கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை அம்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

சொத்துக் குவிப்பு வழக்கில் A1 குற்றவாளி ஜெயலலிதா என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது. ரஜினியும், கமலும் சினிமாவில் எனக்கு சீனியர்கள், ஆனால் அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர்கள் தான்.

 

கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் நீட் தேர்வு வேண்டும். பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியாததால் நீட் தேர்வு அவசியம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தேமுதிக எப்போதும் தயாராக உள்ளது. தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல கையை கூட ஊன்ற முடியாது. அவ்வாறு ஊன்றினால் பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணன் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - நெக்குறுகிய கேப்டன்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

m,

 

டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

இந்த விருது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், திரையுலகின் சூரியன் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 
 

 

Next Story

'முதல்வன்' படத்தில் நடிக்க விஜய் மறுத்தாரா..? இயக்குநர் பதில்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019


நடிகர் விஷாலின் அறிமுக படமான 'செல்லமே' படத்தின் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஷால் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சினிமா தொடர்பாக சில முக்கிய தகவல்களை அவரிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். அதற்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

இந்தியன் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம் தான் இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும், ஆனால், ரஜினி முதலில் அதில் நடிக்க மறுத்ததாகவும், பிறகு படம் வந்த பிறகு நீங்கள் என்னிடம் இந்தமாதிரி கதை சொல்லவில்லையே என்று ஷங்கரிடம் கேட்டதாக ஒரு கதை நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமா உலகத்தில் சுற்றுகிறதே, இது உண்மையா?

இந்தியன் படத்தை பார்த்த அனைத்து நடிகர்களுக்கு அந்த ஃபீல் இருக்கத்தான் செய்யும். ஒரு நல்ல படித்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தால் யார்தான் வருத்தப்பட மாட்டார்கள். எல்லா நடிகர்களுக்கும் அந்த இழப்பு இருக்கத்தான் செய்யும். அவர்களும் மனிதர்கள் தானே.

 

 director gandhi krishna speech about indian movie issue



முதல்வன் படத்தின் கதையை கூட முதலில் நடிகர் விஜய்யிடம் கூறியதாகவும், அவர் முடியாது என்று கூறியதால்தான் அந்த படத்தில் அர்ஜீன் நடித்ததாக கூறுவது உண்மையா?

யாரும் வேண்டாம் என்று கூறமாட்டார்கள். ஷங்கர் சார் கதை சொல்லும் விதமே ரொம்ப ஃபோர்ஸா இருக்கும். அதை கேட்பவர் எடுத்துக்கொள்ளும் மனநிலைதான் ஒவ்வொரு நடிகருக்கும் வேறுபடும். முதல்வன் பட கதை என்பது வேற லெவல் கதைக்களம். ஒரு முதல்வரை எதிர்க்கும் மாதிரியான கதையை சொன்னால், எந்த நடிகராவது அல்லது தயாரிப்பாளராவது உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா? நாளைக்கு பிரச்சனை வருமே, கட்சிகாரர்கள் அடிப்பார்களே என்றுதான் நினைப்பார்கள். இதற்குதான் சிலபேர் யோசிப்பார்களே தவிர படத்தில் நடிக்க பிடிக்காமல் மறுப்பதில்லை. அதற்காக கதையில் எந்த சமரசமும் அவர் செய்துகொள்வதில்லை. தனிப்பட்ட தாக்குதலை தன் படங்களில் ஒருபோதும் ஷங்கர் சார் அனுமதிப்பதில்லை. படத்தின் டப்பிங் முடியும் வரையில் அந்த கொள்கையில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். சிலபேர் குறிப்பிட்ட நபர்களை தாக்கி நேரடியாகவே படங்களை எடுத்துள்ளார்கள். ஆனால், அத்தகைய செயலை ஷங்கர் சார் இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவத்தில் ஒருமுறை கூட செய்ததில்லை. ஜென்டில்மேன் கதையில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கை கூட அடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரே இரவில் நடிகர் மாற்றப்பட்டு அர்ஜீன் நடித்தார். அந்த வகையில் சினிமாவில் சில சூழ்நிலைகளே நடிகர்களை முடிவு செய்யும். சில நபர்களிடம் பயம் இருக்கிறது. அதுவே சில படங்களில் நடிக்க, நடிகர்கள் தயங்குவதற்கு காரணமாக உள்ளது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அது மாறும். அதன் காரணமாகவே ரஜினி, விஜய் ஆகிய இருவரும் ஷங்கர் சாருடன் இணைத்து தொடர்ந்து படம் செய்தார்கள். அதனால், சினிமாவில் சகஜமான ஒன்றுதான்.

பேஸ்புக்கில் நீங்கள் 'சினிமா வேண்டுமா, பாவங்கள் செய்ய பயப்பட கூடாது. ஆனால்'...என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தீர்கள். அதற்கு என்ன அர்த்தம்?

அதை நீங்கள் தான் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும், ஏன்னா பட்டால்தான் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியும்.

தமிழ் சினிமாவில் இருக்கும் மற்ற இயக்குநர்கள் எல்லோருக்கும் இதற்கான அர்த்தம் தெரியுமா?

கண்டிப்பாக தெரியும். உங்களுக்கு இந்த வயதில் புரியாமல் இருக்கலாம். ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.