அதிசயம்:
இளையராஜாவின் வாரிசு வைரமுத்துவுடன் கூட்டணி

இளையராஜா-வைரமுத்து நட்பு உடைந்து போனதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை மட்டும்தான் சொல்ல முடியும். மற்றவற்றை சொல்லி மீண்டும் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்பதால்தான் இந்த எச்சரிக்கை.
பாடல்களின் காப்பிரைட் உரிமையில் எழுந்த பிரச்சனை இவர்களின் பிரிவிற்கான காரணங்களில் ஒன்று.
உடைந்து போன இவர்களின் நட்பை ஒட்டவைப்பதற்கு எத்தனையோ பேர் முயற்சித்தார்கள். எத்தனையோ வருடங்களாயிற்று; எந்த
முயற்சியும் பலனளிக்கவில்லை. இன்று வரை இவர்களை இணைப்பதற்கான முயற்சிகள் மட்டும் அவ்வப்போது நடந்துவருகின்றன.
இளையராஜா மட்டுமல்ல; அவரின் வாரிசுகள் கூட வைரமுத்துவுடன் இணையாமல் இருந்தார்கள். அதனால்தான் நிறைய இயக்குநர்கள் வைரமுத்துவின் வரிகளுக்கு ஆசைப்பட்டும் அது நிறைவேறாமல் போனது.
நிறைய சந்தர்ப்பங்களில் ராஜாவுடன் இணைவதற்கு விரும்பியுள்ளார் வைரமுத்து. ஆனால் ராஜா அதுக்கு இடம் கொடுக்கவேயில்லை.
வாரிசுகளுடனாவது இணைந்துவிட வேண்டும் என்று விரும்பினார் வைரமுத்து.

யுவன்சங்கர்ராஜா முன்னணிக்கு வந்த பிறகு நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் யுவன்சங்கர்ராஜாவை வைரமுத்து புகழ்ந்து தள்ளினார்.
‘’அன்று ஒரு குழந்தை ரெம்ப கருப்பாக, அவ்வளவாக அழகு இல்லாமல் இருந்தது. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை.
காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த நாங்கள் கையில் வைத்திருந்த அந்தக் குழந்தையை பின் சீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டோம்.
அன்று பின் சீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தக் குழந்தை இன்று முன் சீட்டுக்கு வந்திருக்கிறது’’ என்று யுவனை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அப்படி இருந்தும் யுவன் நேற்று வரை வைரமுத்துவுடன் இணையவே இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதியசயத்திலும் அதிசயமாக ராஜா இசையில் வைரமுத்து மகன் மதன் கார்க்கி பாட்டெழுதுகிறார் என்று செய்தி வந்தது.
பாடல் வந்ததா? வரவில்லையா? என்பதைவிட அப்படி ஒரு செய்தி வரும் அளவிற்கு முயற்சி நடந்ததே பெரிய விசயமாக இருந்தது இசை ரசிகர்களுக்கு.

இந்நிலையில் வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று(13.07.2010) ஒரு தித்திப்பான செய்தி. யுவன்சங்கர்ராஜா இசையில் வைரமுத்து
பாட்டெழுதுகிறார். அஜீத் நடிக்கும் இப்படத்தை கங்கைஅமரன் மகன் வெங்கட்பிரபு இயக்குகிறார்.
மங்காத்தா என்ற அந்தப்படத்தில் நல்ல இசையாட்டம் ஆடப்போகிறார்கள். நல்வரவு.
-வடபழனிவாலு
---------------------------------------

இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய இந்த பிரிவுக்கடிதத்தை(இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்) படித்தால் அவர்களின் நட்பும், பிரிவின் கனமும் புரியும். அவர்கள் இணைய மாட்டார்களா என்று தவிக்கும் ரசிகர்களின் தாகமும் புரியும்.
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.
ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.
"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.
மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?
| Name : Subbaraman R |
Country : Germany |
Date :8/27/2010 10:41:10 PM |
|
மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மறப்போம் மன்னிப்போம் என இருவரும் இணையும் நாள் விரைவில் வர பிரார்த்தனை செய்வோம் !!!
|
| Name : vetri |
Country : Denmark |
Date :8/16/2010 2:15:00 PM |
|
இசையில் உச்சம் ராஜா,கர்வத்திலும் மகா உச்சம்.டி எம் எஸ்
குரலையே வேண்டாமென்றவர் மற்றவரை மதிப்பாரா.
வாழ்க வைரமுத்து வாழ்க இளையராசு.
|
| Name : s.gopu |
Country : Australia |
Date :8/16/2010 12:05:47 AM |
|
வைரமுத்து நீ
அன்பை சுமந்து
நண்பனை தேடுகிறாய்..!
இளையராஜா நீ
இதயத்தில் நண்பனை வைத்து
கவிஞனை தேடுகிறாய்
சேர்ந்துபார் வறண்ட பூமியில் புதிய பூ
இசையால் கவிதையாய் இணைந்து மலரும். .!.
இது ஆதங்கத்தின் விசும்பல்...
செல்ல கோபு.
மைசூர்.
|
| Name : mariyppaa |
Country : Denmark |
Date :8/2/2010 9:00:11 PM |
|
சோத்துக்கு டிங்கிரி அடித்த காலத்தில் கர்வமில்லை
பணக்கட்டுகள் நிறைந்ததனால் குணக்கட்டுக்கள் சிதறின
பின் புலம்புவதில் பயனில்லை.
|
| Name : P. Varadharajan |
Country : India |
Date :7/16/2010 8:12:24 PM |
|
என் போன்ற ஒரு சிலருக்கு இது ஒரு புதுமையான ஆனால் அதிர்ச்சியான தகவலாகும். எனினும் திரு. வைரமுத்து அவர்கள் தன் கடந்த்த கால உள்ள பதிவுகளை கவிதை வரிகளாய் வடித்து இருப்பது அருமை. நட்பின் ஆழத்தையும் , அர்த்தத்தையும் இதைவிட மேலாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் நட்பு புதுப்பிக்கப்பட்டு புத்துயிர்பெற மனதார விரும்புகிறேன்.
|
| Name : pillai |
Country : Canada |
Date :7/16/2010 1:08:14 PM |
|
ஒருவரிடம் ..வாத்திய காரர் பின்நாளில்
பின்நாளில் அவர் ( இசை அமைப்பாளர் ) மகன்
தன்னிடம் வேலை பார்த்து ஆஸ்கார் வென்றார்
இசை அமைப்பாளர் மகன் தன்னிடம் வரும்போது
கிபோர்ட் "வாசிக்க தெரியாது" என்ற "பெரியஜானி "
அல்லவா..இந்த ராஜா ! நாமும் நம்பினோம் !
இறைவனை நம்பும் குடும்பம் வாய் திறக்கவில்லை ! பின்நாளில் சிறுவயது "போடோக்கள்" அம்பலமாகின !சிறுவனின்
"இசை திறமை! உலகம் வியக்கும்" MANN "RRRRRR KUUUUUU
MAAAAN
|
| Name : kalaivanan |
Country : Qatar |
Date :7/15/2010 10:37:22 PM |
|
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன..............
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்...................... அருமை யான வரிகள் ....................... இந்த இளையராஜா பற்றி அனைவருக்கும் தெரியும் கெட்ட குணம் கொண்டவர் அது மட்டும் இல்லாமல் முரட்டு குணமும் ...... ஒழிந்து போவது உறுதி ..
|
| Name : Thameez |
Country : United Arab Emirates |
Date :7/14/2010 7:02:00 PM |
|
நானும் பார்த்து ஆச்சிரிய பட்டது தான். விரிவான செய்திகள் பினால் வரும் என்று நம்பலாம். இதுல வெங்கட் பிரபுவுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்கள் வைரமுத்துவின் வைர வரிகளை சேர்த்து இருக்குறீர்கள் ஆனால் யாரோ ஒருவர் (பெயர் நினைவில்லை) வைர முத்துவை கிழி கிழி என கிழித்தார். ராசாவை தூக்கி தலைல வைத்தார். வைரமுத்துகூட பருத்திவீரனுக்கு பாட்டு எழுதாததை வருத்ததுடன் சொல்லி இருக்கிறார்.
|
| Name : Ravi |
Country : India |
Date :7/14/2010 11:58:06 AM |
|
Very nice letter. I may not write the following exactly but the message is- Some time back Dr Karunanithi had said: He really lacks the friendship with opposition leaders just because they are opposite leaders. But he used to be very friendly with Dr MGR even though they were from opposite parties. But here the culture of Dr Vairamuthu is so beautiful to relish! Whether Ilayaraja and Vairamuthu again become friends or not is secondary issue to me. But we must learn the culture.
|
| Name : k.theepan |
|
Date :7/14/2010 12:15:31 AM |
|
இனிய இசைக்குச் சிறந்த வரிகள்
கிடைக்க வேண்டுமா?
சிறந்த வரிகளுக்கு இனிய இசை
கிடைக்க வேண்டுமா?
இருவரும் இணையவேண்டும்.
நல்ல தமிழ்ப் பாடல்கள் காதில்
தேனாய் பாயவேண்டும்!
தீபன்
|
| Name : rafe.dubai |
Country : United Arab Emirates |
Date :7/13/2010 10:26:10 PM |
|
சூப்பர் லட்டர், கிரேட் வைரமுத்து உங்கள் நட்பு சேர பிரதிக்கேரன் உங்கலகுக அல்ல உண்மையான நட்புக்கு
|
| Name : sakthy |
|
Date :7/13/2010 10:09:16 PM |
|
எந்த இளகிய வீர கவிதை வசனம் எழுதினாலும் இரண்டு பக்கமும் இருக்கும் நீதியை அறியாது கருத்து சொல்வது நடுநிலை தவறுவதாகும். no comments
|
| Name : elango |
Country : Kuwait |
Date :7/13/2010 9:18:54 PM |
|
நற்பு என்றால் அது இதுதான்
|
| Name : john peter |
Country : Bahrain |
Date :7/13/2010 9:01:49 PM |
|
Really a very sensitive friendship broken. What everbody wish should happen, Ilayaraja and Vairamuthu must become friends again.
|
| Name : shakthivel |
Country : India |
Date :7/13/2010 8:16:13 PM |
|
நீங்கள் ஒன்று செரவேன்ன்டு " உலகில் உள்ள கடவுள்களுக்கெல்லாம் நன்றி சொல்வேன்" சேரும் வரை சொல்லிகொன்டிருப்பேன் " கேட்டுகொண்டிருப்பேன் கடவுளிடம்"""" உணர்வுகள் துடிக்கின்றது உங்கள் இசையில்"உங்கள் வரியில்"உள்ளம் மகிழ"உலகம் நெகிழ" உயிரும் உருக" நீங்கள் இணையவேண்டும் இசை மகனே வரி மகனே வாருங்கள் இனைந்து" வாழ்வோம் நங்கள் மகிழ்ந்து" காத்திருக்கும் ஒரு இசை காதலனின் ஏக்கம்" நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் செவிகளில் ஒலிகளை ஏற்றிகொண்டிருப்பேன்" ராஜவைரம்"வைரராஜ"வரும் வரை ஓயமாட்டேன்" எதிர் பார்ப்புடன்"சக்திவேல்"
|
| Name : sakthikkanal |
Country : Australia |
Date :7/13/2010 7:16:25 PM |
|
இது வைரமுத்துவின் மிகச்சிறந்த கவிதை .வாழ்க !
|