கமல் பேச்சை தட்ட முடியாத த்ரிஷா அம்மா
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிறது ‘மன்மதன் அம்பு’. கதாநாயகியாக திரிஷாவும், முக்கியமான கதாபாத்திரத்தில் மாதவனும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
‘மன்மதன் அம்பு’ படத்திற்கான நடிப்பு ஒத்திகைகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசன் வீட்டில் கடந்த இரண்டு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில்... தற்போது படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.
‘தசாவதாரம்’ படத்தின் ஒப்பற்ற 10 வேட நடிப்பிற்குப் பிறகு, ‘உன்னைப்போல் ஒருவனில்’ எதார்த்தமாகவும் நடித்து கவர்ந்த கமலஹாசன்... இந்த “மன்மதன் அம்பு” படத்தில் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தப் போகிறாரோ... என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே தொடங்கி உள்ளது. இந்நிலையில், மன்மதன் அம்புக்கு மேலும் ஒரு சுவாரசியம் கூடுகிறது...
அந்த சுவரசியமான விஷயம்... என்னான்னா... நடிகை திரிஷாவின் அம்மாவும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பதே அது.
திரிஷாவின் சினிமா வளர்ச்சியில் பெரும் பங்காய் இருந்து வருபவர், திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன். இவர்தான் திரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை எல்லாம் கவனித்து வருகிறார்.
வெளியூர் படப்பிடிப்புகளின் போது, திரிஷாவிற்கு துணையாக உமாவும் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் உமாவிற்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருவதும் உண்டு... உமாதான் அவற்றை எல்லாம் மறுத்து வந்தார்.
இதுவரை நடிப்புக்கு மறுப்பு சொல்லி வந்த உமா... தற்போது, மன்மதன் அம்பில் நடிக்க சம்மதித்து உள்ளார்.
சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ‘மன்மதன் அம்பு’ படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.அதில், திரிஷாவுடன் வந்து கலந்து கொண்ட உமா, ‘‘திரிஷாவின் அம்மாவா இவர்...! திரிஷாவின் அக்கா மாதிரி... இருக்கிறாரே!”என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்பட்டார்.
இந்தப் படத்தில், ‘திரிஷாவின் அம்மாவிற்கு ஏற்றமாதிரி ஒரு கேரக்டர் இருப்பதாகவும், அதில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும்’ கே.எஸ்.ரவிக்குமார் உமாவிடம் கேட்க... அதற்கு, உமா வழக்கம் போலவே மறுத்து இருக்கிறார்.
அப்போது, அங்கு உடன் இருந்த கமலஹாசன் வற்புறுத்தவே, ஒருவழியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் உமா...பிறகு, கமல் கேட்டும்... உமா ஊஹூம்.. என்பாரா என்ன?
ஏன்னா... ஏற்கனவே, இந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா இடையே கடும் போட்டி நிலவிய போது... திரிஷாவை நடிக்க வைப்பதாக, தான் வாக்குறுதி அளித்து இருந்த “மர்மயோகி” தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதால்... நயன்தாராவை ஒதுக்கி விட்டுட்டு... இந்த “மன்மதன் அம்பில்” திரிஷாவுக்கு வாய்ப்புக் கொடுத்தார் கமல்.
அப்படி இருக்கும் போது... கமல் கேட்டும் மறுப்பாரா என்ன!. மேலும், உலக நாயகன் கூட சோர்ந்து நடிக்க அவருக்கு கொடுத்து வைத்திருக்கனுமே...
தற்போது, இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருவதால்... கமலஹாசன், மாதவன், திரிஷா ஆகியோருடன்உமா கிருஷ்ணனும் அங்குச் சென்றிருக்காராம்...மேலும், உமா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட இருக்குதாம். இந்நிலையில், உமாவின் கேரக்டர் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்...
இதில், திரிஷாவுக்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னான்னா... அம்மா உமாவின் மேல் உள்ள எதிர்பார்ப்பினால... திரிஷாவுக்கு ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு கொஞ்சம் கம்மி தானாம்.
பாப்போம்..பாப்போம் அம்மாவா! பொண்ணான்னு..!