பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளை
பல்லடம் அருகே பெண்ணை கொன்று 109 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த தண்ணீர் பந்தலைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (55). இவரது மனைவி முத்து லட்சுமி (40). இன்று இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமியை கொன்று, பீரோவில் இருந்த 109 பவுன் நகை மற்றும் ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.