எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயப்படுகிறார் விஜயகாந்த்: கே.என்.நேரு
திருச்சி மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு,
கடந்த திமுக ஆட்சியில், விஜயகாந்த் திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், விமர்சனம் செய்ய பயப்படுகிறார். சட்டமன்றத்திற்குப் போகவே பயப்படுகிறார். ஏதாவது எதிர்த்துப் பேசினால் 10 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து போய்விடும் என பயந்து பேசாமல் இருக்கிறார். அதனால் பேசவே பயப்படுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சொன்தைப்போல உண்மையான எதிர்க்கட்சி மக்கள் மன்றத்தில் திமுகதான். இவ்வாறு பேசினார்.