நிலமோசடியை விசாரிக்க தனி கோர்ட் அமைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
சென்னையைச் சேர்ந்த வக்கீல் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார்.
அம்மனுவில், ‘’நில அபகரிப்பு புகார் தொடர்பாக விசா ரிக்க சென்னையில் 2 நீதிமன்றங்கள் உள்பட 25 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து உள்துறை செயலாளர் 11.8.2011 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, தமிழ் நாட்டில் இனி நில மோசடி வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்ட திருப்பூர், கோவை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்தது.
மேலும் நிலமோசடி என்றால் என்ன என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நில மோசடி, நில அபகரிப்பு எங்கெல்லாம் நடந்தது என்பது பற்றியும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.