போராட்டம் தொடரும்! மு.க.ஸ்டாலின் பேச்சு!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 08.07.2012 நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிமுக ஆட்சியை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டம் ஜெயலலிதாவை அச்சப்பட வைத்துள்ளது. அதனால்தான் கைது செய்யப்பட்டவர்களை அவர் விடுதலை செய்துள்ளார். அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து திமுகவின் போராட்டங்கள் தொடரும். பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு, மின்சாரம் வழங்கப்படுகிறதோ இல்லையோ அதன் கட்டணம் நான்கு மடங்கு ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. இதனையெல்லாம் கண்டித்துத்தான் போராட்டம் நடத்தியிருக்கிறோம். எங்களது போராட்டம் தொடரும் என்றார்.