நேர்மையான கலெக்டருக்கு நேர்ந்த கதி
விருதுநகரில் கலெக்டராக இருந்த பாலாஜி, நேர்மையாக நடந்து கொண்டார். பதவி ஏற்ற பின், நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி அகற்றினார். விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டை முழுமையாக செயல்படுத்தினார்.
அரசின் நலத் திட்டங்களுக்கு, பயனாளிகள் தேர்வு நேர்மையாக நடந்தது. தவறு செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு, "செக்' வைத்தார். அதிகாரிகளை வேலை வாங்குவதில், கறாராக இருந்தார். அரசியல்வாதிகளிடம் இணக்கம் காட்டவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணிகளுக்கு, நேர்மையாக ஆட்களை தேர்வு செய்ததால், அரசியல்வாதிகள் கொதிப்படைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளார். இதற்கு, பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ’’நேர்மையான கலெக்டரை மாற்றம் செய்தது, கண்டிக் கத்தக்கது. இது, தவறான வழிமுறை,'' என்றார்.