சத்துணவு சங்க தலைவர் கைது சத்துணவு சங்க தலைவராக இருக்கும் வரதராஜன் என்பவர், வேலை வாங்கி தருவதாக கூறி, 76 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்தததாக கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதனை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முகாந்திரம் இருப்பதை அறிந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் வரதராஜனை இன்று மாலை கைது செய்தனர்.