திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் காயமடைந்தனர். சாமி தரிசனம் செய்வதற்கு 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் வரிசையாக நிற்பதாகவும், மொட்டை அடிப்பதற்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இதனையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித் துள்ளது.
சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகே பக்தர்களுக்கு சாமி தரிசனம் கிடைக்கப் பெறுகிறது என்பதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நெரிசலில் பக்தர்கள் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தும்படி திருப்பதி காவல் நிலையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.