30 பைலட்டுகள்நீக்கம்: ஏர்இந்தியா அதிரடி
ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஏர்இந்தியா பைலட்டுகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மேலும் 30 பைலட்டுகளை ஏர்இந்தியா பணிநீக்கம் செய்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இருவாரங்களாக போராட்டம் நடத்திவரும் ஏர்இந்தியா விமான பைலட்டுகள் , அரசுடன் பேச்சுவார்த்தைக்குவர தயாராக இல்லை. இந்நிலையில் மேலும் 30 பைலட்டுகளைஏர் இந்தியா பணி நீககம் செய்துள்ளது. இதனால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.