அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
திங்கட்கிழமை, 21, மே 2012
பாகிஸ்தானில் இந்து கோவில்மீது தாக்குதல்
......................................
உலக செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
......................................
ஹசாரே குழுவினர் ஜூலை 25ல் உண்ணாவிரதம்
......................................
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான தேதி மாற்றம்
......................................
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆண்குழந்தை பிறந்தது
......................................
ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன்: பி.ஏ.சங்மா
......................................
சரத் பொன்சேகா விடுதலை
......................................
மருத்துவப்படிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு
......................................
30 பைலட்டுகள்நீக்கம்: ஏர்இந்தியா அதிரடி
......................................
நாங்குநேரியில் இடி மின்னல் மழை: மூதாட்டி சாவு
......................................
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்: டிஆர். பாலு
......................................
வீட்டுவசதி வாரிய ஊழல்! போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் கைது!
......................................
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் (படங்கள்)
......................................
குடி தண்ணீருக்காக அலையும் புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொகுதி மக்கள்! (படங்கள்)
......................................
கேப்டன் செல்வாக்கே துணை! தன்னந்தனியாக கலக்கும் தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன்! (படங்கள்)
......................................
எடியூரப்பா மீது மேலும் ஒரு வழக்கு
......................................
திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர் பஸ் மோதி பலி
......................................
ஜெயலலிதா கோரிக்கை: முலாயம் சிங் நிராகரிப்பு
......................................
அடம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்! கோபம் அடைந்த கோர்ட் கெடு விதித்தது!
......................................
ஜெயலலிதாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி: சங்மா
......................................
கல்விக்கடன் மறுப்பு! கூலித்தொழிலாளியான பொறியியல் மாணவன்!
......................................
அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று வீதியில் இறங்கி போராட வேண்டும்? ராமதாஸ் அறிவுரை!
......................................
மதுரை ஆதீன விவகாரம்! நெல்லை கண்ணன் நேர்காணல்!
......................................
ஒரே தீர்வு தனி ஈழம்தான்: ராமதாஸ்
......................................
ஐ.பி.எல். போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி
......................................
வெளிநாட்டு விலைமாதுக்களின் கூடாரம் இந்தியா : ஒரு அதிர்ச்சி சுற்றுலா ரிப்போர்ட்
......................................
அதிமுக வேட்பாளருடன் தேமுதிக வேட்பாளர் :ஜெயலலிதாவிடம் புகார்
......................................
ரஜினி ரசிகர் மன்ற வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பி போனார்
......................................
பாத்திர தொழிலாளிகளிடம் பணம் பறிமுதல்; பணத்தை மீட்க பரிதாபமாக காத்திருப்பு ( படம் )
......................................
ரஜினி மன்ற வேட்பாளருக்கு விஜய் மன்றம் ஆதரவு இல்லை
......................................
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா அஞ்சலி
......................................
போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
......................................
என் மீது வாரி இரைக்கும் சேறு அவர்கள் மீதே விழும் : வீரபாண்டி ஆறுமுகம் ஆவேசம்
......................................
அஜ்மல் கசாப் சைவ உணவுக்கு மாறினான்
......................................
சசிகலா நடராஜன் புகார் மனு
......................................
தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும் அபாயம்
......................................
குடிபோதையில், வாகனம் ஓட்டடுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை
......................................
கர்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பிறந்து இறந்தது குழந்தை
......................................
திருமண வீட்டில் மொய் கவர்களை திருடி சுற்றுலா சென்ற தந்தை, மகன் கைது
......................................
இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! - மெரினாவில் மக்கள் முழக்கம்!
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
மிரட்டி மிரட்டி பொய் வழக்கு போடும் போலீஸ் :நிம்மதியை இழந்துள்ள குறவர் இனமக்கள்
......................................
கோவில் இல்லாத ஊர்!
......................................
எழுத்தாளர் ஜான் மைர்தால் இந்தியா வர தடை?
......................................
திருச்சி விஜிலென்ஸ் ஆபீஸில் நேரு ஆஜர் : சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை
......................................
வெளிநாட்டு செக்ஸ் தொழிலாளர்கள் மீது விசாரணை : மத்திய அரசு திடீர் தடை
......................................
போதை பார்ட்டி : 58 ஆண்கள் -38 பெண்கள் கைது
......................................
ஊழலை அம்பலப்படுத்தியவர் அடித்து கொலை
......................................
பெண் ஊழியர் கொலை : மொபைல் கடை உரிமையாளர் கைது
......................................
சேவல் சண்டை சூதாட்டம்: 27 பேர் கைது; பணம், கார்கள் பறிமுதல்
......................................
ரஜினிகாந்த் மன்றம் இடைத்தேர்தலில் போட்டி :விஜயாந்த் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெறுவோம் என உறுதி
......................................
முத்தரையர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் அளிக்கும் : ப. சிதம்பரம்
......................................
காங்கிரஸ் தயவில் நடிகர் ஷாருக் கான் கலாட்டா செய்து வருகிறார் : பால் தாக்கரே பாய்ச்சல்
......................................
ஒபாமாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு
......................................
இன்று சூரிய கிரகணம்
......................................
ஐஸ்வர்யா ராய் மகளின் பெயர் என்ன?
......................................
டி.வி. சேனல்கள் முறைப்படுத்தப்படுமா?
......................................
சென்னையில் தேசிய புகைப்பட கண்காட்சி:தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் படம் இடம்பெறவில்லை!
......................................
திரும்பத் திரும்பக் குற்றஞ்சாட்டுகிறார்கள் : கலைஞர்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 21, மே 2012 (11:44 IST)


தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும் அபாயம்


கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் இறைச்சி, மருத்துவம் உள்ளிட்ட அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியிலிருந்து 15 வது கி.மீ.,ல் கேரள எல்லை துவங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ஆறு முக்கிய வழித்தடமும், எட்டு குறுக்கு வழித்தடமும் உள்ளது. கேரளாவுக்கு தேவையான பால், காய்கறி, மாடு, கோழி இறைச்சி மற்றும் அத்யாவசிய பொருட்கள் பொள்ளாச்சி வழியாகத்தான் செல்கிறது.

தமிழகத்தால் பல்வேறு வழிகளிலும் பலன்பெறும் கேரளா, அதற்கு கைமாறாக, இறைச்சிகழிவுகள்,, மருத்துவகழிவுகள், மற்றும் சிலவகை ரப்பர் தொழிற்ச்சாலைகளின் ரசாயனக்கழிவுகளை தமிழகத்தில் தெரியாமல் கொண்டுவந்து கொட்டி வருகிறது.

கேரளாவில் கோழி இறைச்சிக்கழிவு, மருத்துவமனைக்கழிவு மற்றும் ரசாயன கழிவை கொட்ட அம்மாநில அரசு ஏராளமான நிபந்தனைகளை  விதித்துள்ளது.


அதனால்,  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கறிக்கோழி கொண்டு செல்லும் லாரிகளில், கோழி இறைச்சிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படுகிறது. "சிமென்ட்' பைகளில்  கொண்டு வரும் கழிவுகள் தமிழகத்திலுள்ள எல்லையோர கிராமங்களில் ரோட்டோரத்தில் வீசுகின்றனர்.


கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு 17ம் தேதி இரசாயன கழிவுகளை; பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள செடிமுத்தூர் கிராமத்தில் கொட்டப்பட்டது.


கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய லாரியை பிடித்து வைத்த பொதுமக்கள், மற்றும் மதிமுக வினர் சாலைமறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பிடிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் ரசாயன கழிவுகளை கேரளாவுக்கே திருப்பி  அள்ளிச்செல்ல வைத்தனர்.


கேரளாவில் கழிவை கொட்டாமல் தமிழகத்துக்கு கொண்டு சென்றால், அம்மாநில அதிகாரிகள் அந்த வாகனத்துக்கு சிறப்பு அனுமதி வழங்கி வழியனுப்பி  வைக்கின்றனர்.


இப்பிரச்னையில் அ.தி.மு.க.,- தி.மு.க., உள்ளிட்ட பிரதான  அரசியல் கட்சிகள் எதுவும் அக்கறை காட்டாமல் வேடிக்கை பார்க்கின்றன. ம.தி.மு.க., மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்பினர் மட்டுமே போராடிவருகின்றனர்.


இது குறித்து செய்தியாள்ளர்கள் கேட்டபோது கோவை மாவட்ட உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் செந்தில்விநாயகம் கூறுகையில்; கேரளாவிலிருந்து தொழிற்சாலை கழிவை கொண்டுவரும் போது,  அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், "இது இயற்கை உரத்துக்கு பயன்படுத்தும் கழிவு' என்று சான்று கொடுத்தார்.
 
அது உண்மையல்ல.... இயற்கை உரத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அதை தமிழகத்துக்கு கொண்டுய்வர வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால், மருத்துவக்கழிவுகள், அபாயகரமானவை. வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.  விதிமுறைக்கு முரணான இச்சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


பத்து லட்ச்சத்துக்கும் அதிகமான மலையாளிகள் தமிழகத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார்கள், கேரளாவின் அன்றாட உணவுத்தேவைகள் அனைத்தும் தமிழகத்தை நம்பியே உள்ளது. இத்தனை யையும் தாண்டி தமிழகமக்களையும் அரசையும் முட்டாளாக்கும் கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு உடனடியாக தடை போடவேண்டும், இல்லையானால் தமிழகம் கேரளாவின் குப்பை மேடாகிவிடும்.

 

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : kaiyum Country : Saudi Arabia Date :5/21/2012 5:34:30 PM
தமிழர்களே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு . அரசியல்வாதிகளும் , அரசாங்க வேலையாட்களும் பொதுமக்களுக்காக எந்த நல்லகாரியமும் செய்யப்போவதில்லை !!? ஆகையால் இந்த மாதிரி செயல்களுக்கு ஒன்றாக சேர்ந்து போராடுவோம் . வாருங்கள் தமிழ் நெஞ்ஜெங்களே .தமிழ் இன மக்களை தமிழர்களாகிய நாம் தான் வழிநடத்தி செல்லவேண்டும்.