சேவல் சண்டை சூதாட்டம்: 27 பேர் கைது; பணம், கார்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டம், உவரி அருகே பரதர் உவரியில், பாஸ்கர் என்பவரது தோட்டத்தில் தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட வெளியூர் ஆட்கள் கூடி, சேவல் சண்டை நடத்துவது தெரியவந்தது. இரு சேவல்களின் கால்களிலும் கத்தியைக் கட்டிவிட்டு மோத விடுவார்கள். இரு சேவல்களின் மீதும் பணம் கட்டுவார்கள். வெற்றிபெறும் சேவலின் மீது பணம் செலுத்தியவர்களுக்கு, எதிர் சேவல் மீது செலுத்திய பணம் கிடைக்கும்.
தடை விதிக்கப்பட்டுள்ள இத்தகைய சூதாட்டம் குறித்து, தகவல் அறிந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி, அங்கு சென்றார். போலீசை கண்டதும், சூதாட்டக் கும்பல் ஓட்டம் பிடித்தது. இருப்பினும், அங்கிருந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 37 ஆயிரம் ரூபாயும், 27 சேவல்களும், ஸ்கார்பியோ,சுமோ, ஆம்னி என, நான்கு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கைதானவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள்.