தமிழை அலுவல் மொழியாக்க கோரி தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மக்களவயில் நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தம்பிதுரை (அ.தி.மு.க.), டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), தொல்.திருமாவளவன் (வி.சி.க.) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில், தமிழை அலுவல் மொழிகளில் ஒன்றாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். மேலும், நாட்டில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்தும் தங்களது கருத்துகளை வெளியிட்டனர்.