வாலாஜாவில் பயணிகள் ரயில் மறியல்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் சென்னைக்குச் செல்ல ரயில் இல்லாத நிலையில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதை அடுத்து ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை வரும் சில ரயில்கள் தாமதமாயின. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் வராத நிலையில், சென்னை செல்லும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இந்நிலையில் அடுத்து வந்த ரயிலை வாலாஜாவில் நிறுத்தி தாங்கள் ஏறிச் செல்ல வசதி ஏற்படுத்துமாறு ரயில்வே நிலைய அதிகாரியிடம் கேட்டனர். அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியதால், கோபமடைந்த பயணிகள் வாலாஜாவில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.