ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை தேர்வு செய்யவேண்டும்: டி.ராஜா
"ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
பெங்களூரில் (06.05.2012) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பெரும்பாலானோர் ஆதரவு பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி எதிர்பார்க்கிறது. அவ்வாறு ஆதரவு பெற்ற சிறந்த வேட்பாளரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அதேநேரத்தில் ஜனாதிபதியாக வர இருப்பவர் அரசியல் அறிவு சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அரசியல் சாராத ஒருவரை அந்த பதவிக்கு பரிசீலிக்க கூடாது என்றார்.