முதலில் வேட்பாளரை அறிவியுங்கள்!மா.கம்யூ., வலியுறுத்தல்!
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி முதலில் அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து அக்கட்சி சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி முதலில் அறிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அவரை ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார்.