காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க : மாஜி அமைச்சர் பேச்சு
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில், சிவாஜி நடித்த, "கர்ணன்' பட விழாவில், கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’ சிவாஜியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே, அவர் தான் என் தலைவன். தற்போதுள்ள தலைமுறைக்கு, நீதி, தர்மத்தை பற்றி கவலையில்லை.
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடலில், காதலர்களின் முகபாவனையைப் பார்த்தால், அதிலுள்ள கண்ணியம் தெரியும். "இருவர் உள்ளம், பார்த்தால் பசி தீரும்' படங்களை, ஆங்கில, "சப்-டைட்டில்' போட்டு, வெளிநாடுகளில் திரையிட வேண்டும். அதில் வரும் காதல் காட்சிகள், உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவரும்’’என்று தெரிவித்தார்.